காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலப் பரப்பிலும், கடல் பரப்பிலும் பூமிக்கடியில் உள்ள இயற்கை வளங்களாக உள்ள எரிவாயுக்களை எடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கெனவே 2010ஆம் ஆண்டு மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கான அனுமதியை “தி கிரேட் ஈஸ்டர் எனர்ஜி கார்ப்பரேசன்” என்ற கம்பெனியோடு புரிந்துணர்வு ஒப்பந்த மும் போடப்பட்டது. துவக்கத்தில் இதன் பாதிப்பை உணராத விவசாயி களும், மீனவர்களும், இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என்று உணர்ந்து ஒன்றுபட்ட பல போராட்டங்களை நடத்தினர். சட்டமன்றத்திலும் இப்பிரச்சனை வலுவாக எழுப்பப்பட்டது. அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா இதுகுறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைத்தார். அந்த குழுவின் அறிக்கைப்படி மீத்தேன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு தடை விதித்து சட்டமன்றத்திலேயே அறிவித்தார்.
பூமிக்கடியில் உள்ள இயற்கை எரிவாயுக்களை எடுப்பதற்கு மத்திய அரசு ஏற்கனவே இருந்த சட்டங்களை மாற்றியது. அதன்படி மீத்தேன், ஷேல்கேஸ், டைட்கேஷ், நிலக்கரி போன்றவற்றை எடுப்பதற்கு தனித்தனி அனுமதி பெற வேண்டியதில்லை, ஹைட்ரோ கார்பன் என்ற ஒற்றைத் தலைப்பிற்குள் அனைத்தையும் உள்ளடக்கியது, அதன்படி ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை பெற்றாலே பூமிக்கடியில் உள்ள அனைத்து இயற்கை எரிவாயுக்களையும் எடுக்கலாம் என்ற ஒற்றை அனுமதி சட்டம் அமலுக்கு வந்தது. இந்த அடிப்படையில் தான் காவிரி டெல்டா மாவட்டங்க ளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு கடந்தாண்டு சர்வதேச ஏலத்தை விட்டது. அதன்படி ஓ.என்.ஜி.சி., வேதாந்தா போன்ற நிறுவனங்கள், விழுப் புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் குறிப்பிட்ட வட்டாரங்க ளை நிலப்பரப்பிலும், கடல் பரப்பிலும் ஏலம் எடுத்துள்ளது. ஓ.என்.ஜி.சி., நிறுவனம் காவிரி படுகையில் ஏற்கனவே செயல்படுத்தி வரும் எரிவாயு எடுக்கும் கிணறுகளிலேயே ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் சோதனை அடிப்படை யில் செயல்படுத்துமோ என்ற அச்சமும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
வாழத் தகுதியற்ற பகுதியாக...
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பூமிக்கடியில் பல ஆயிரம் அடி செங்குத்தாக துளை யிட்டும், பக்கவாட்டில் ஆயிரக்கணக்கான அடிகள் துளை யிட்டும், நீரியியல் விரிசல் மூலம் வெடிக்க வைப்பது, இதன் மூலம் நிலப்பரப்பும், கடல் பரப்பும் நாசமாக்கப்பட்டு விவசாய மும், கடல் வளமும் அழிக்கப்பட்டு மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாறிவரும் என்பதற்காகத்தான் பலப் போராட் டங்களை இப்பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் தொடர்ச்சியாக பல போராட்டங்கள் ஒவ்வொரு அமைப்பு கள், அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக நடை பெற்றது. ஒன்றுபட்ட போராட்டத்தை வலுவாக முன்னெடுக்க வேண்டுமென்பதற்காக அனைத்து விவசாய சங்கங்கள், அமைப்புகளை ஒன்றிணைத்து “காவிரி டெல்டா பாது காப்பு கூட்டியக்கம்” என்ற அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பின் சார்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணி 5 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை நோக்கி நடைபெற்றது.
மத்திய அரசின் புதிய அறிவிப்பு
எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி தொடர்பான திட்டங்களை ஏற்கனவே ஏ பிரிவில் இருந்தது. தற்போது மத்திய அரசு இதை பி பிரிவுக்கு மாற்றி ஜனவரி 16ஆம் தேதி உத்தரவிட்டு, மத்திய அரசின் அரசாணையில் வெளி யிட்டுள்ளது. இதன்படி 1986ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், மற்றும் 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கைகளின் படி சில திட்டங்களை செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும், திட்டத்தை செயல் படுத்த உள்ள பகுதிகளில் பொதுமக்கள் கருத்தறியும் கூட்டங்களை நடத்திட வேண்டும். தற்போது மத்திய அரசின் உத்தரவுப்படி சுற்றுச்சூழல் அனுமதியும் தேவை யில்லை, பொதுமக்கள் கருத்தறியும் கூட்டங்களும் தேவை யில்லை, இந்த நடவடிக்கை முழுக்க, முழுக்க வேதாந்தா போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு சாதகமானதாகும்.
விவசாயத்தை பாழ்படுத்தி, கடல் பகுதியை நிர்மூல மாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல் படுத்தக்கூடாது என தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் பேசியபோது மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எழுத்துப்பூர்வமாய் அளித்த பதிலில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தவில்லை என்று கூறினார். ஆனால் மத்திய அரசின் இந்த புதிய உத்தரவு எப்படியும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதாகவே உள்ளது.
முதல்வரின் கடிதமும் தமிழக அரசின் வேடமும்
ஜனவரி 16 அன்று மத்திய அரசின் அரசாணை வந்தவுடன் தமிழக முதல்வர் மத்திய அரசிற்கு அவசரமாக கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்திட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக் கின்றனர். பல போராட்டங்கள் நடந்துள்ளன. பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. எனவே ‘ஏ’ பிரிவிலிருந்து ‘பி’ பிரிவுக்கு மாற்றியதை மறுபரிசீலனை செய்து மீண்டும் ‘ஏ’ பிரிவுக்கு மாற்றுங்கள், மக்களிடம் உள்ள அச்சத்தை போக்கிட அவர்களிடம் பேசி, கூட்டங்களை நடத்தி, புரிய வைத்து ஏற்றுக்கொள்ள செய்து செயல்படுத்தலாம் என்ற தொனியில் முதல்வரின் கடிதம் உள்ளது. மேலும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், கடந்த ஆண்டு தில்லிக்கே நேரில் சென்று தமிழகத்தில் செயல்படுத்தப்படும், எந்த திட்டத்திற் கும் சுற்றுச்சூழல் அனுமதி, பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தத் தேவையில்லை என்று கடிதமே கொடுத்துள்ளார். ஒரு பக்கம் விவசாயிகளுக்கு பாதகமான திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று சொல்லிக் கொண்டே தமிழக அமைச்சர் இதுபோன்ற கடிதம் நேரில் கொடுத்தது தமிழக நலனுக்கு விவசாயிகளுக்கு எதிரானது.
கடந்தாண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்தபோது, காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் சட்ட மன்றத்தில் இப்பிரச்சனையை எழுப்பிட வேண்டும். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்த வேண்டும் என கூறி எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ஆகியோரும் கோரிக்கை மனு கொடுத்தனர். அதன்படி சட்டமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு கோபமாக பதில ளித்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் இருக்கும் போதே எங்கள் அரசு இப்போதும் அனுமதிக்காது; எதிர்காலத்திலும் அனுமதிக்காது என பேசினார். ஆனால் தற்போது முதல்வர் மத்திய அரசிற்கு எழுதிய கடிதம் இதற்கு வலுசேர்ப்பதாக இல்லை. மேலும் அதிமுக அரசு தேர்தல் பிரச்சாரங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் பேசும்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கிறோம், செயல்படுத்த மாட்டோம் என மக்களிடம் பேசிக்கொண்டே இத்திட்டத்தை செயல்படுத்திட மத்திய அரசு வெளியிடும் ஆணைகளை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. ஒரு பக்கம் மக்களிடம் எதிர்ப்பது போன்று பேசிக்கொண்டே மத்திய அரசின் செயல் பாடுகளை ஆதரித்துக் கொண்டு இரட்டைவேடம் போடுகிறது.
ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுப்போம்
காவிரிப் படுகையில் பேரழிவை உண்டாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்திட இப்பகுதியில் உள்ள விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் அனைத்து அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகளை ஒன்றி ணைந்து செயல்படும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக் கத்தின் சார்பில் எதிர்வரும் 13ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்ட மும், எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது பல்லா யிரக்கணக்கான டெல்டா மாவட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி சென்னையில் ஒன்றுபட்ட போராட்டத்தையும் நடத்தி மண்ணையும், மக்களையும் காப்போம்.
கட்டுரையாளர் : தமிழ்நாடு விவசாயிகள் சங்க
மாநிலச் செயலாளர்